பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 4ம் தேதி "பாஸ்போர்ட் மேளா " சிறப்பு முகாம் துவக்கம்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் சார்பாக வரும் பிப்ரவரி 4ம் மற்றும் 5ம் தேதிகளில் பாஸ்போர்ட் மேளா சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதில், கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்கள் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்து பயனடையலாம்.

இந்த முகாமானது பாஸ்போர்ட் சேவா கேந்தரா 25 ஏஜிடி பிசினஸ் பார்க்கில் (லோட்டஸ் கண் மருத்துவமனை அருகில்) நடைபெறவுள்ளது. 

இம்முகாமில், சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதற்கு மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். இதற்காக இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், 4 மற்றும் 5ம் தேதிகளில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்தராவில் தகுந்த ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

இதற்கான அழைப்பு ஜனவரி 25ம் தேதி முதல் வழங்கப்படும். மேலும், தட்கல் மற்றும் போலிஸ் க்ளியரன்ஸ் சான்றிதழ்கள் இந்த முகாமில் பெறப்பட மாட்டாது. அன்றைய தினத்தில் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...